• சுதந்திர தின விழா,

    நம் சங்க தலைமை அலுவலகத்தில்(15/08/2021) 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று காலை 8.30 மணிக்கு நம் சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு பூ.கோகுல கண்ணன், அவர்கள் தேசிய கொடியேற்றியும், அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கபட்டது. இவ் விழாவில் பொதுச்செயலாளர் திரு M.வீரராகவன், துணைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு S.சீனிவாசன், திரு K.N.விஜயகுமார், திரு K.ஆனந்தகுமார் திரு எம்.வடிவேல், திரு V.சினீவாசன், திரு K.தியாகராஜன், திரு P.துரைராஜ், திரு ரகு ஆனந்த், திரு L.ரகமத்துல்லா, இவர்களுடன் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு செந்தமிழ் செல்வன். அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





  • நிர்வாகிகள் கூட்டம்

    75வது சுதந்திர தினத்தை நம் சங்கத்தின் சார்பாக எப்படி நடத்துவது என்று நிறுவனத் தலைவர் திரு.பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்,வீரராகவன், துணை செயலாளர் S.சினீவாசன், இணை செயலாளர் K.N.விஜயகுமார், மற்றும் உறுப்பினர்கள் V.சினீவாசன், L.ரகமத்துல்லா கலந்து கொண்டனர்.





  • நினைவு நாள்

    முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நிறுவனத் தலைவர் திரு பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.





  • ஆலோசனை கூட்டம்

    ஜுலை மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் திரு பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.





  • மூன்றாம் ஆண்டு விழா

    அனைவருக்கும் வணக்கம் நம் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா ஜனவரி மாதம் 3ம் தேதியன்று சென்னை அசோக் பில்லரில் உள்ள கோகுலம் பார்க் ஒட்டலில் நிறுவனத் தலைவர் திரு பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, மற்றும் தினசரி நாள்காட்டி, பரிசு பொருள்கள் வழங்கபட்டது. சிறப்புமிகுந்த விழாவில் மாநில நிர்வாகிகள், மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





  • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,

    இன்று 25/09/2020 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நம் தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் செயல்பாடு பற்றி நிறுவனத் தலைவர் பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.வீரராகவன், துணைச் செயலாளர் சே.சீனிவாசன்,மற்றும் செயற்குழு உறுப்பினர் கே.ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





  • ஜனவரி மாதாந்திர கூட்டம்,

    இன்று 12/01/2020 ஞாயிற்றுக்கிழமை காலை நம் தலைமை அலுவலகத்தில் 9.00 மணி முதல் 11மணிக்குள் நம் சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டமும், 2019ம் ஆண்டின் ஆண்டறிக்கையும், 2020ம் ஆண்டின் சங்கத்தின் செயல்பாடு பற்றிய சிறப்பு கூட்டமும் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் திரு பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமை வகித்தார், துணைச் செயலாளர் திரு S.சினிவாசன் அவர்கள் வரவேற்புரையும், பொருளாளர் திரு K.சேகர்எட்வர்ட்ராஜ் அவர்கள் 2019ம் ஆண்டின் ஆண்டறிக்கையும், பொதுச் செயலாளர் திரு M.வீரராகவன் 2020ம் ஆண்டின் சங்கத்தின் செயல்பாடு பற்றி தெரிவித்தனர். கூட்டத்தில் சங்கத்திற்க்கான (Website) இணையதளத்தை வெளியிடபட்டது, கலந்து கொண்ட அனைவருக்கும் தினசரி நாள்காட்டி வழங்கியும். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் இணைச் செயலாளர் K.N.விஜயகுமார் நன்றியுரை ஆற்றினார்,





  • நமது சங்கத்தின் 2020ம் ஆண்டின் சனவரி மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம்

    நமது சங்கத்தின் 2020ம் ஆண்டின் சனவரி மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம் தலைமை அலுவலகத்தில்(12-01-2020) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் 11மணி வரை நடைபெற உள்ளது.(இக் கூட்டத்தில் 2019 ஆண்டறிக்கையும்,மற்றும் 2020ம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்து) நிறுவனத் தலைவர் பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில், துணைச் செயலாளர் திரு s.சீனிவாசன்,அவர்கள் வரவேற்புரை ஆற்றுவார், பொருளாளர் திரு K.சேகர்எட்வர்ட்ராஜ் அவர்கள் முன்னிலை வகிப்பார், ஆண்டறிக்கையை திரு M.வீரராகவன் பொதுச் செயலாளர் அவர்கள் வாசித்தும் அதன் பிறகு இறுதியில் திரு KN.விஜயகுமார் இணைச் செயலாளர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியுரை ஆற்ற உள்ளார்.





  • ஆலோசனை கூட்டம்

    இன்று 21/12/2019 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் நமது சங்க தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் திரு M.வீரராகவன், துணைச் செயலாளர், திரு S.சீனிவாசன், இணைச் செயலாளர், திரு K.N.விஜயகுமார், சங்க செய்தி தொடர்பாளர். திரு எம்.வடிவேல், மற்றும் சென்னை மாவட்ட பொருப்பாளர், திரு K.ஆனந்தகுமார், ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சிக்கான சில முக்கிய முடிவுகள் எடுக்கபட்டது.





  • அமைப்புசரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதிய அடையாள அட்டை வழங்கும் விழா

    பிரதம மந்திரியின் தொழிலாளர்கள் ஒய்வூதிய திட்டத்தின்கீழ் அமைப்புசரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்காக ஒய்வூதிய அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் நிலோபர் கபில் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். இவ் விழாவில் நம் சங்கத்தின் சார்பாக 18 வயது முதல் 40 வயது உள்ள உறுப்பினர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலுக்கு ஒய்வூதிய அடையாள அட்டை பெறபட்டது. விழாவில் நிறுவனத் தலைவர் பூ.கோகுலகண்ணன், மாநில செயலாளர் எம். வீரராகவன், பொருளாளர் கே.சேகர்.எட்வர்ட்ராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





  • இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிறந்தநாள்,

    நம் சங்கத்தின் சார்பாக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 15ம் தேதி முன்னாள் ஜனாதிபதி மற்றும் அணு விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் படத்திற்கு நிறுவன தலைவர் பூ.கோகுலகண்ணன், பொதுச்செயலாளர் திரு M.வீரராகவன்,இணைச் செயலாளர் திரு K.N.விஜயகுமார், சங்க செய்தி தொடர்பாளர். திரு எம்.வடிவேல், சென்னை மாவட்ட பொருப்பாளர் திரு K.ஆனந்தகுமார்,மற்றும் உறுப்பினர்கள்,மலர் தூவி மரியாதை செலுத்தினர்.





  • சங்க பொதுச்செயலாளர் இல்ல விழா,

    அக்டோபர் மாதம் 13/10/2019 அன்று மாலை7 மணியளவில் சென்னை திருவெற்றியூரில், தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு M.வீரராகவன் அவர்களின் மகள் செல்வி V.திவ்யஸ்ரீ அவர்களின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு சங்கத்தின் நிறுவன தலைவர் பூ.கோகுலகண்ணன், இணைச் செயலாளர், திரு K.N.விஜயகுமார், சென்னை மாவட்ட பொருப்பாளர், திரு K.ஆனந்தகுமார், திரு K.சேகர்எட்வர்ட்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், திரு A.சுப்பிரமணியன், திரு V.கார்த்திகேயன், திரு V.ஆனந்த், உறுப்பினர்கள், திரு M.ராஜ்திலக், திரு S.ராஜசேகர், திரு L.ரகமத்துல்லா, மற்றும் அனைவரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.





  • சங்க தலைமை அலுவலகத்தில் ஆயுத புஜை நடைபெற்றது

    ஆயுத பூஜையை முன்னிட்டு நம் சங்கத்தின் சார்பாக தலைமை அலுவலகத்தில் 08/10/2019 அன்று மாலை 4.00 மணியளவில் நிறுவன தலைவர் பூ.கோகுலகண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆயுத பூஜையில் கலந்து கொண்டு சிறபித்த துணைச் செயலாளர், திரு S.சீனிவாசன், இணைச் செயலாளர், திரு K.N.விஜயகுமார், சங்க செய்தி தொடர்பாளர். திரு எம்.வடிவேல், சென்னை மாவட்ட பொருப்பாளர், திரு K.ஆனந்தகுமார், திரு K.சேகர்எட்வர்ட்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், திரு A.சுப்பிரமணியன், திரு V.கார்த்திகேயன், திரு V.ஆனந்த், உறுப்பினர்கள், திரு M.ராஜ்திலக், திரு M.கமலக்கண்ணன், திருG.செல்வம், திருS.ராஜசேகர், திரு L.ரகமத்துல்லா, திரு N.குமார், ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.





  • பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள்

    நம் சங்கத்தின் சார்பாக 15/09/2019 அன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் திரு பூ.கோகுல கண்ணன், பொதுச்செயலாளர் திரு M.வீரராகவன், துணைச் செயலாளர், திரு S.சீனிவாசன், இணைச் செயலாளர், திரு K.N.விஜயகுமார், சென்னை மாவட்ட பொருப்பாளர் K.ஆனந்தகுமார். திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த A.அப்துல்ரசூல்தீன், வே.கார்த்திக், V.ஆனந்த், M.ராஜ் திலக், S.சீனிவாசன், L.ரகமத்துல்லா, S.கார்த்திக் ராஜா, C.பழனிச்சாமி, R.ராஜசேகர், R.கோபி, அனைவரும் கலந்து கொண்டனர்.





  • உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா,

    இன்று 28/09/2019 மாலை சென்னை தி.நகரில் உள்ள நமது சங்க தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் பூ.கோகுலகண்ணன், அவர்கள் பொதுச்செயலாளர் திரு M.வீரராகவன், துணைச் செயலாளர் திரு S.சீனிவாசன், இணைச் செயலாளர் திரு K.N.விஜயகுமார், சங்க செய்தி தொடர்பாளர் திரு எம்.வடிவேல், சென்னை மாவட்ட பொருப்பாளர் திரு K.ஆனந்தகுமார்,செயற்குழு உறுப்பினர் திரு V.ஆனந்த், மற்றும் உறுப்பினர்கள் திரு L.ரகமத்துல்லா, திரு M.ராஜ்திலக், திரு M.கார்த்திக் ராஜா, திரு R.கோபி,ஆகிய அனைவருக்கும் முதல் கட்டமாக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி தன் மகிழ்ச்சியையும், சங்க வளர்ச்சி பெற அனைவரும் பாடுபட வேண்டுமென்று தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.





  • விற்பனை பிரதிநிதிகள் சங்கம்,

    அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் ஒரு அமைப்பு உண்டு. ஆனால் நம் விற்பனை தொழிலாளர்களுக்கு ஒரு அமைப்புகூட இல்லை நமக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. நமக்கு ஒரு இடர்பாடு (problem) ஏற்பட்டால் நம்மை காக்க எவரும் இல்லை அதனால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பாகவும் அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமாகவும் இருக்க தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட முதல் சங்கம் தான் நம் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள மகிழ்ச்சியடைகிறோம்.





  • உழைப்பாளர் தினம் (may day)

    தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்க்கு நம் சங்கத்தை சார்ந்த தலைமை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உலக உழைப்பாளர்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பெற்று அனைவரின் வாழ்வில் சந்தோஷமும்,வளர்ச்சியும்,பெற வேண்டுமென்று சபதம் ஏற்க்கப்பட்டது.





  • சங்கம் துவக்கம்,

    இச் சங்கம் சரியாகவும்,முறையாகவும் இருக்க வேண்டும் என்று பல அமைப்புகளிடம் ஆலோசனை செய்தோம்.அது மட்டுமில்லாமல் சட்ட ஆலோசகர்களிடமும் ஆலோசனை பெற்றோம்.சங்கம் பதிவு செய்ய தமிழ்நாடு பதிவுத்துறையிலும், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திலும் ஆலோசனை பெற்று நம் வாழ்க்கைக்கு சங்கம் எங்கு பதிவு செய்தால் உத்தரவாதமும்,பாதுகாப்பாகவும் இருக்கும் என்று முடிவு செய்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பெற்ற ஆலோசனைபடி தமிழகத்தின் தலைமை இடமான சென்னை மாநகரில் உள்ள தி நகரில் தலைமை அலுவலகம் அமைத்து அனைத்து விற்பனை பிரதிநிதிகளையும் அழைத்து 18/10/2018 அன்று ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது. அக் கூட்டத்தில் தமிழ்நாடு விற்பனை பிரதிநிகள் மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் என்று பெயர் வைத்து தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் துணைத் தலைவர், மூன்று துணைச் செயலாளர்கள், என ஏழு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து நம் சங்கத்தை முறையாக பதிவு செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டு அனைத்து ஆவணங்களையும் தயார்செய்து 30/11/ 2018 அன்று தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் சமர்பித்தோம். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் ஆணையர் அவர்கள் நாம் சமர்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்து இந்த சங்கம் முறையாக நடைபெறுகிறது என்று நம் சங்கத்திற்க்கு 21/ 05/ 2019 அன்று அங்கிகாரம் வழங்கப்பட்டது.





  • குழுவின் தொலைநோக்கு பார்வை,

    குழுவில் உள்ள அனைத்து விற்பனை பிரதிநிதி நண்பர்களும் தங்கள் பதிவில் இவ்வளவு சிறப்பாக நடைபெறும் இக் குழு நம் அனைவருடைய வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பாகவும்,ஒரு அரனாகவும் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அனைவரின் கருத்துக்கு மதிப்பளித்து நாம் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை எடுப்போம் என்று அனைவரும் 05/09/2018 அன்று சென்னை தி.நகரில் உள்ள வெங்கட்நாரயனா சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் பூ.கோகுலகண்ணன், M.வீரராகவன், K.சேகர் எட்வர்ட்ராஜ், M.கமால்முகமது, S.சீனிவாசன், K.N.விஜயகுமார், M.ரமீஸ்ராஜா, V.கார்த்திகேயன், V.சீனிவாசன், K.திருப்பதி, L.ரகமத்துல்லா, S.செல்வகுமார், S.சுகுமார், P.பழனியப்பன், K.பிரபாகரன், மற்றும் பல நண்பர்கள் கலந்துகொண்டனர்.அன்று கலந்துகொண்ட அனைத்து விற்பனை பிரதிநிதி நண்பர்களின் கருத்தை கேட்டு அறிந்தோம். அங்கே வந்த விற்பனை பிரதிநிதி நண்பர்கள் அனைவரும் நம் வாழ்க்கை ஒரு உத்தரவாதமில்லாத வாழ்க்கையாக உள்ளது. நம்மை அரவனைத்து கொள்ள எவறும் இல்லை ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் வாழ்க்கைக்கு ஒரு அங்கிகாரமும்,ஒரு பாதுகாப்பும் உள்ள சங்கம் நமக்கு தேவை என்றும், அவை சரியாகவும்,முறையாகவும் ஆரம்பிக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியிதால் சங்கம் துவங்கலாம் என்று சிறப்பான நல்ல முடிவு எடுக்கப்பட்டது.





  • தமிழ்நாடு விற்பனை பிரதிநிதி குழு துவக்கம்,

    சென்னையில் உள்ள சில விற்பனை பிரதிநிதி நண்பர்கள் ஒன்று சேர்ந்து நமக்கு பணிசார்ந்த தகவல்களுக்கு பயன்படும் வகையில் தமிழகத்தில் முதல் முதலாக ஒரு குழு (Whatsapp group) 20/04/2018 அன்று துவங்கப்பட்டது. அக் குழுவில் அரசியல்,பொழுபோக்கு மற்றும் தீவீரவாதம், Goodmorning, Goodnight, போன்ற தகவல்களை தவிர்க்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.





  • குழுவின் பயணம்,

    தமிழ்நாடு விற்பனை பிரதிநிதி குழு 20/04/2018 அன்று துவங்கிய நாள் முதல் விற்பனை பிரதிநிதிகள் அவரவர் விற்பனை பிரதிநிதி நண்பர்களை சேர்க்க தொடங்கினர். அது மெல்ல வளர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள விற்பனை பிரதிநிதி நண்பர்கள் சேர்ந்தனர்.அவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்க்கு தேவைபட்ட Super Stockist, Area Stockist, Salesman, TSI, SR, SO, ASM, RSM, மற்றும் பணிபுரியும் நிறுவன விளம்பரம், இது போன்ற மிகவும் பயனுள்ள தகவல்களை பதிவிட்டு தங்கள் தேவைகளை பூர்த்திசெய்யும் ஒரு அட்சய பாத்திரமாக அனைவரும் பயன்படுத்திக்கொண்டனர்.